பிரதமர் மோடி உருவப்படத்தை தூக்கில்போட முயன்ற திமுகவினர் 15 பேர் கைது
செய்யப்பட்டனர்.
காவரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பொள்ளாச்சியில் திமுக நகரச் செயலாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பிரதமர் மோடி, தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோரது உருவப்படங்களை தூக்கிலிட முயன்றனர். அவர்களுக்கு எதிராக கண்டன கோஷமும் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தமாகாவினர் கையெழுத்து இயக்கம்...: காவரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டி மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தும் தமாகாவினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர். மாவட்டத் தலைவர் குணசேகரன், நிர்வாகிகள் கன்னிமுத்து, பழனிசெவ்வேல், சுப்புராயன், மணிகண்டன், பிரியங்கா ராமசாமி, ஜெகதீஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








