இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ரயில் நிலையங்களுக்குள் நுழைந்து மறியலில் ஈடுபட வேண்டாம்: ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்

ரயில் நிலையங்களுக்குள் நுழைந்து மறியல் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:53 am IST

ரயில் நிலையங்களுக்குள் நுழைந்து மறியல் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில்,  சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த சில நாள்களாக ரயில் நிலையங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களில் ஈடுபடுபவர்களின் உணர்வுகளை ரயில்வே நிர்வாகம் முழுமையாக மதிக்கிறது. அதேநேரம், இந்தப் போராட்டங்களால் ரயில் நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ரயில்களை நிறுத்துவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். பயணிகளில் அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவோர் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ரயில் நிலையங்களுக்குள் நுழைந்து ரயில்களை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்.  ரயில்வே நிர்வாகம் தனது பணியை செவ்வனே செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.