ரயில் நிலையங்களுக்குள் நுழைந்து மறியல் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த சில நாள்களாக ரயில் நிலையங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களில் ஈடுபடுபவர்களின் உணர்வுகளை ரயில்வே நிர்வாகம் முழுமையாக மதிக்கிறது. அதேநேரம், இந்தப் போராட்டங்களால் ரயில் நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. ரயில்களை நிறுத்துவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். பயணிகளில் அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவோர் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ரயில் நிலையங்களுக்குள் நுழைந்து ரயில்களை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். ரயில்வே நிர்வாகம் தனது பணியை செவ்வனே செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!

மதிப்புமிக்க 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 1.90 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
ஆணவக்கொலைகளை தடுக்க உடனடியாக சட்டம் இயற்றுக: திருமாவளவன் எம்.பி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


