முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்குரைஞர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:46 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும்,  நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோவை வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்த நிலையில், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் 200- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தை  முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    இதுகுறித்து கோவை வழக்குரைஞர்கள் சங்கச் செயலாளர் சுதீஷ் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏப்ரல் 7-ஆம் தேதி வரை தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம். 
தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம்.  நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
    வழக்குரைஞர்கள் ஊர்வலமாகச் சென்றபோது நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விளம்பரப் பதாகையில் எழுதப்பட்டிருந்த ஹிந்தி எழுத்துகளை கிழித்து தங்களது எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.