மாநில அளவிலான சைக்கிள் போட்டி காரமடையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை, காரமடை எஸ்ஆர்எஸ்ஐ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகியன சார்பில் மாநில அளவிலான சைக்கிள் போட்டி காரமடை, பெரியபுத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.
இப்போட்டியை எஸ்ஆர்எஸ்ஐ பள்ளித் தாளாளர் ராமகிருஷ்ணன் தொடக்கிவைத்தார். இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள32 மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், 14 வயதுக்கு உள்பட்ட பிரிவினருக்கான போட்டியில் மாணவர்களுக்கு 10 கி.மீ., மாணவிகளுக்கு 8 கி.மீ., 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 12 கி.மீ., 19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15. கி.மீ. தொலைவிலான போட்டிகள் நடைபெற்றன.
ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் புணேவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


