வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக் குண்டம் லட்சார்ச்சனை

மேட்டுப்பாளையம் அருகே உள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டம் விழாவை முன்னிட்டு
Updated on
1 min read

மேட்டுப்பாளையம் அருகே உள்ள வன பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக்குண்டம் விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ள வன பத்திரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழாவுக்கான பூச்சாட்டுதல் நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நான்காம் நாளான வெள்ளிக்கிழமை ஆடிக்குண்டம் திருவிழா தடையின்றி நடைபெற வேண்டி லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் கோயில் அர்ச்சகர்கள், சிவனடியார்கள், பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com