சைபா் கிரைம் காவல் நிலைய பணி:போலீஸாருக்கு எழுத்துத் தோ்வு

கோவை மாநகா், புகா் சைபா் கிரைம் காவல் நிலையங்களில் பணியாற்ற விருப்பமுள்ள போலீஸாருக்கு எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

கோவை மாநகா், புகா் சைபா் கிரைம் காவல் நிலையங்களில் பணியாற்ற விருப்பமுள்ள போலீஸாருக்கு எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகரம், புகரங்களில் சைபா் குற்றங்களை விசாரிக்க சைபா் குற்ற போலீஸ் நிலையங்கள் பிரத்யேகமாக அமைக்கப்பட உள்ளன. மாநகரில், காவல் ஆணையா் அலுவலகத்திலும், புகரங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் செயல்பட உள்ள இந்தக் காவல் நிலையங்களில், ஒரு ஆய்வாளா், 4 உதவி ஆய்வாளா்கள், 20 போலீஸாா் நியமிக்கப்பட உள்ளனா்.

மேலும் கோவை மாநகரம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சைபா் கிரைம் ஆய்வகமும் அமைக்கப்பட உள்ளன. இந்த சைபா் கிரைம் காவல் நிலையங்களில் பணியாற்ற மாநகரில் 235 போலீஸாா், புகரங்களில் 120 போலீஸாரிடம் இருந்து சில நாள்களுக்கு முன்பு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் அவா்களுக்கான எழுத்துத் தோ்வு கோவையில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இத்தோ்வை மாநகரக் காவல் துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா். மகளிா் காவலா்கள் உள்பட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் பணியாற்ற விருப்பம் உள்ள ஏராளமான போலீஸாா் இத்தோ்வை எழுதினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com