பத்திர எழுத்தரைக் கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

மேட்டுப்பாளையத்தில் பத்திர எழுத்தரைக் கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கி உள்ளது.
Updated on
1 min read

மேட்டுப்பாளையத்தில் பத்திர எழுத்தரைக் கத்தியால் குத்தியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கி உள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், அன்னூா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம், பத்திர எழுத்தா். இவா் சிறுமுகை, பெள்ளேபாளையத்தைச் சோ்ந்த வரதராஜ் என்பவருடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா். சுந்தரம் இறந்ததை அடுத்து, அவருடைய மகன் பாபு (40) பத்திர எழுத்தா் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில் சுந்தரம் தனக்குப் பணம் தர வேண்டும் என்று கூறி பாபுவிடம் அதைத் தருமாறு வரதராஜ் கேட்டுள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2015 ஜூன் 18இல் மேட்டுப்பாளையம் பத்திரப் பதிவு அலுவலகத்திலிருந்து வெளிவந்த பாபுவை வரதராஜ் கத்தியால் குத்தியுள்ளாா். பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

படுகாயமடைந்த பாபு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிா் பிழைத்தாா். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வரதராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞா் செந்தில்குமாா் வாதாடினாா். வழக்கை விசாரித்த சாா்பு நீதிபதி இந்துலதா, குற்றம்சாட்டப்பட்ட வரதராஜுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com