கோவையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டுச் செல்லப்பட்ட ரூ.2.76 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் ஞாயற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை அதிகாரி மல்லிகா தலைமையிலான குழுவினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் ரூ.2.76 லட்சம் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காரில் வந்த ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ராம்சிவபிராகாஷிடம் விசாரித்தபோது, அவர் அதே பகுதியில் வீட்டு உள் அலங்காரப் பொருள்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருவது தெரியவந்தது. மேலும், வியாபாரத்தில் கிடைத்தத் தொகையை வீட்டுக்கு எடுத்துச் செல்வதாக அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.