வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு
By DIN | Published On : 12th April 2019 09:00 AM | Last Updated : 12th April 2019 09:00 AM | அ+அ அ- |

ஆழியாறு அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
ஆழியாறைச் சேர்ந்தவர்கள் முருகன் (36), துரைராஜ் (36). இருவரும் புதன்கிழமை கோட்டூரில் இருந்து ஆழியாறுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். முருகன் இருசக்கர வாகனத்தை ஓட்டினார்.
அப்போது, எதிரே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஆனைமலையை சேர்ந்த கிஷோர்குமார் (26), முருகன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த துரைராஜ், கிஷோர்குமார் ஆகியோர் மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த முருகன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். இதுகுறித்து ஆழியாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.