வங்கி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்

கோவையில் பொதுத்துறை வங்கி வாகனத்தில் பாதுகாவலர்கள் உரிமம் இல்லாமல் கொண்டு சென்ற இரு துப்பாக்கிகளை தேர்தல்
Updated on
1 min read

கோவையில் பொதுத்துறை வங்கி வாகனத்தில் பாதுகாவலர்கள் உரிமம் இல்லாமல் கொண்டு சென்ற இரு துப்பாக்கிகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கோவை வடக்கு தொகுதிக்கு உள்பட்ட சாய்பாபா காலனியில் தேர்தல் பறக்கும் படைக் குழு அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே சென்ற பொதுத்துறை வங்கியின் வாகனத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் பாதுகாப்பாளர்கள் வைத்திருந்த உரிமம் இல்லாத தூப்பாக்கி, தோட்டாக்களை பறக்கும் படைக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  
அதைத் தொடர்ந்து உதவித் தேர்தல் அலுவலர் ஆய்வு செய்த பின் துப்பாக்கிகள், தோட்டாக்களை ஆயுதப்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com