கோவையை அடுத்த மதுக்கரை அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
சூலூர், குட்டியாத்தாள் வீதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (41). இவர், மதுக்கரையை அடுத்த சேலம்-கொச்சி புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.