பாம்பு கடித்து பெண் பலி
By DIN | Published On : 04th August 2019 09:21 AM | Last Updated : 04th August 2019 09:21 AM | அ+அ அ- |

சூலூர் அருகே பாம்பு கடித்து பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.
சூலூர் அருகே கதிரிமில்ஸ் பள்ளி பகுதியில் உள்ள ஆவிரன்குடி தோப்பைச் சேர்ந்தவர் சின்னதுரை மனைவி சரஸ்வதி (54). இவர் கடந்த மாதம் 29ஆம் தேதி தனது வீட்டில் இருந்து வெளியே வந்தபோது வாசலில் இருந்த கட்டுவிரியன் பாம்பு அவரை கடித்தது.
இதில் விஷம் ஏறிய நிலையில் சரஸ்வதியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரஸ்வதி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சூலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.