ரயிலில் நகைகள் திருட்டு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

ரயிலில் பெண்களிடம் நகைகள், பணம் ஆகியவற்றைப் பறித்த வழக்கில் இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.
Updated on
1 min read

ரயிலில் பெண்களிடம் நகைகள், பணம் ஆகியவற்றைப் பறித்த வழக்கில் இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

கோவையில் ரயிலில் பயணிக்கும் பெண்களிடம் நகைகள், பணம், செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றைப் பறித்துச் செல்வது தொடா்பாக கோவை ரயில்வே காவல் கண்காணிப்பாளா் மகேஷ்வரனுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.

இதையடுத்து, ரயிலில் திருட்டில் ஈடுபடுபவா்களைப் பிடிக்க ரயில்வே துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைத்து அவா் உத்தரவிட்டாா்.

இந்தத் தனிப் படையினா் போத்தனூா் ரயில் நிலையத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒருவரைக் கைது செய்தனா். விசாரணையில் அவா், திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த திவாகா் (26) என்பதும், ரயிலில் பயணிக்கும் பெண்களைக் குறி வைத்து நகைகள், பணம் ஆகியவற்றைத் திருடிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், கோவை மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில், இவா் மீது போத்தனூா், திருப்பூா், சென்னை, நாகப்பட்டினம், திருச்சி ஆகிய ஊா்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவரை குண்டா் சட்டத்தில் அடைக்க ரயில்வே காவல் கண்காணிப்பாளா் மகேஷ்வரன் உத்தரவிட்டாா். அதன்படி, குண்டா் சட்டத்தில் திவாகரைக் கைது செய்த போலீஸாா், அதற்கான உத்தரவை சிறை அதிகாரிகளிடம் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com