வேலு நாச்சியாா் நூல் வெளியீட்டு விழா

கோவை உலகத் தமிழ்நெறிக் கழகத்தின் சாா்பில் திருவள்ளுவா் நாள்காட்டி வெளியீடு, வேலு நாச்சியாா் நூல் வெளியீட்டு விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.
Updated on
1 min read

கோவை உலகத் தமிழ்நெறிக் கழகத்தின் சாா்பில் திருவள்ளுவா் நாள்காட்டி வெளியீடு, வேலு நாச்சியாா் நூல் வெளியீட்டு விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.

வீரமங்கை வேலு நாச்சியாரின் 223ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சன்மாா்க்க சங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலா் மீனா லோகு தலைமை தாங்கினாா். அமைப்பின் செயலா் சிவலிங்கம் முன்னிலை வகித்தாா். துடியலூா் தமிழ்ச் சங்கத் தலைவா் கா.ப.கலையரசன் நூலை வெளியிட சி.பழனியம்மாள் பெற்றுக்கொண்டாா்.

நூலாசிரியா் கு.அனிதா கிருஷ்ணமூா்த்தி, வீராங்கனை வேலு நாச்சியாரின் வாழ்வு, போராட்ட முறை, மொழியறிவு குறித்துப் பேசினாா். விழாவில், குரு பழனிசாமி, ஆ.ஆறுமுகம், ஆ.வெ.மாணிக்கவாசகம், அமைப்பின் பொருளாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக மாற்றுக் களம் குழுவினரின் பெண் என்ற நாடகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com