வாகன பேட்டரி விற்பனைக் கடையில் ரூ. 4 ஆயிரம் திருட்டு

கோவையில் பேட்டரி கடையின் பூட்டை உடைத்து ரூ. 4 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
Updated on
1 min read

கோவையில் பேட்டரி கடையின் பூட்டை உடைத்து ரூ. 4 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை, ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் ஜலால் (55). இவர் திருச்சி சாலையில் வாகன பேட்டரி விற்பனைக் கடை நடத்தி வருகிறார். புதன்கிழமை இரவு வியாபாரம் முடித்து வீடு திரும்பியுள்ளார். 
இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் கடைக்குச் சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்ததில் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 4 ஆயிரம் பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து ஷேக் ஜலால் அளித்தப் புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com