பேருந்து வசதி கேட்டு  மலைவாழ் மக்கள் மனு

பொள்ளாச்சியை அடுத்த சுள்ளிமேட்டுபதி, பாறைபதி மலைவாழ் மக்கள் பேருந்து வசதி கேட்டு பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 
Updated on
1 min read

பொள்ளாச்சியை அடுத்த சுள்ளிமேட்டுபதி, பாறைபதி மலைவாழ் மக்கள் பேருந்து வசதி கேட்டு பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 
பொள்ளாச்சியை அடுத்த ஒடையகுளம் பேரூராட்சிக்கு உள்பட்ட சுள்ளிமேட்டுபதி, பாறைபதி உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாமல் இருந்துவருகிறது. இதனால், இவர்களின் குழந்தைகள் 3 கி.மீ. வரை நடந்துசென்றுதான் பள்ளிக்கு செல்லவேண்டிய நிலை இருந்துவருகிறது. இதனால், பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கு செல்லவே ஆர்வம் காட்டுவதில்லை. 
இந்த நிலையை மாற்ற தங்கள் பகுதிகளுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கூறி 20க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com