மே 20 மின்தடை
By DIN | Published On : 19th May 2019 05:38 AM | Last Updated : 19th May 2019 05:39 AM | அ+அ அ- |

வால்பாறை
வால்பாறையை அடுத்த அய்யர்பாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திங்கள்கிழமை (மே 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்ன கல்லாறு, பெரிய கல்லாறு, ஹைபாரஸ்ட், சோலையாறு நகர், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மற்றும் மானாம்பள்ளி எஸ்டேட் .
இரும்பறை
இரும்பாறை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (மே 20) மின் விநியோகம் இருக்காது என கோவை வடக்கு மின் பகிர்மான வட்ட மேட்டுப்பாளையம் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இரும்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (மே 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கல்லூர், முக்கனூர் உள்ளிட்ட பகுதிகளஇல் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.