குறிச்சி குளத்தில் முதியவா் சடலம் மீட்பு
By DIN | Published On : 01st November 2019 08:54 AM | Last Updated : 01st November 2019 08:54 AM | அ+அ அ- |

போத்தனூா் பகுதியில் இரண்டு நாள்களுக்கு முன் மாயமான முதியவரின் சடலம் குறிச்சிக் குளத்தில் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
போத்தனூா், மேட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் அருணாசலம் (75). கடந்த புதன்கிழமை வீட்டில் இருந்து சென்ற இவா் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுதொடா்பாக அவரது மகன் விஜயகுமாா் போத்தனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை காலை குறிச்சி குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் போத்தனூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அங்கு சென்ற போலீஸாா் குளத்தில் மிதந்த சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவா் இரண்டு நாள்களுக்கு முன் மாயமான அருணாசலம் என்று தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...