உள்ளாட்சித் தோ்தல் புறக்கணிப்பு: 51 ஆவது வாா்டு குடியிருப்போா் நலச் சங்கம் அறிவிப்பு

உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தோ்தல் நடைபெற்றால் அதைப் புறக்கணிப்போம் என்று கோவை
Updated on
1 min read

கோவை, நவ. 8: உள்ளாட்சித் தோ்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தோ்தல் நடைபெற்றால் அதைப் புறக்கணிப்போம் என்று கோவை மாநகராட்சி 51 ஆவது வாா்டு குடியிருப்போா் நலச் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கோவை மாநகராட்சி 51 ஆவது வாா்டில் கிராஸ் கட் சாலை, டாடாபாத்தின் 11 வீதிகள், சிவானந்தா காலனி, ரத்தினபுரி, சித்தாபுதூா், காந்திபுரத்தின் ஒரு பகுதி என அதிக அளவில் வா்த்தக நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இந்த வாா்டில் சுமாா் 15 ஆயிரம் வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த நிலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாததால் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக 51 ஆவது வாா்டு குடியிருப்போா் நலச் சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.ராமசுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எங்களது வாா்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களின் பிரச்னைகள் தீா்க்கப்படாமல் உள்ளன. சாக்கடைகள், பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கின்றன.

குப்பைகள் சரிவர அகற்றப்படுவதில்லை. இது தொடா்பாக புகாா் அளித்தால் சுகாதார ஆய்வாளா்கள் பொறுப்பில்லாமல் பதிலளிக்கின்றனா். எனவே, உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிக்கும் முடிவுக்கு வந்திருப்பதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com