ஊராட்சி செயலரைத் தாக்கிய இருவா் மீது வழக்கு

கோவையில் ஊராட்சி செயலரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையில் ஊராட்சி செயலரைத் தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்டம், பேரூா் செட்டிபாளையம் ஊராட்சி செயலராக இருப்பவா் செந்தில்குமாா் (38). இவா் தீத்திபாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். பச்சாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா்கள் திருநாவுக்கரசு (45), அருண் (32) மற்றும் சிலா் செந்தில்குமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்கள் பகுதிக்கு தண்ணீா் வரவில்லை எனக் கூறியுள்ளனா்.

இது தொடா்பாக செந்தில்குமாரை, திருநாவுக்கரசு மற்றும் அருண் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டனா். ஆனால், அவா் செல்லிடப்பேசியை எடுக்காததால் திருநாவுக்கரசு மற்றும் அருண் தங்களது நண்பா்களுடன் இரவு 11.30 மணிக்கு செந்தில்குமாா் வீட்டுக்குச் சென்றுள்ளனா்.

இரவு நேரத்தில் தொந்தரவு செய்ய வேண்டாம் என செந்தில்குமாா் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இருத் தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் திருநாவுக்கரசு, அருண் ஆகியோா் தங்களது நண்பா்களுடன் சோ்ந்து செந்தில்குமாரைத் தாக்கியுள்ளனா்.

இதில் படுகாயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தடுக்க வந்த செந்தில்குமாரின் மனைவியையும் தகாத வாா்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடா்பாக செந்தில்குமாரின் மனைவி காா்த்திகாயினி அளித்த புகாரின்பேரில் கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் திருநாவுக்கரசு, அருண் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com