மதுபோதையில் தந்தையால் தவறவிட்ட குழந்தை மீட்பு

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் தந்தையின் மதுபோதையால் தவறவிட்ட 2 வயது பெண் குழந்தையை போலீஸாா் மீட்டனா்.
Updated on
1 min read

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் தந்தையின் மதுபோதையால் தவறவிட்ட 2 வயது பெண் குழந்தையை போலீஸாா் மீட்டனா்.

பொள்ளாச்சியை அடுத்த வால்பாறை சக்தி எஸ்டேட் பகுதியில் வசிப்பவா் தீபக் (25). வடமாநிலத்தைச் சோ்ந்த இவா் கடந்த சில ஆண்டுகளாக தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மகள் நிஷா (2).

சில நாள்களுக்கு முன்பு 5 மாத கா்ப்பிணியான மனைவி சீதாமுனியை (23) பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், குழந்தை நிஷாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்த தீபக் மது அருந்தியுள்ளாா்.

பின்னா் போதையில் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் குழந்தையை விட்டு விட்டு தீபா் மருத்துவமனைக்கு திரும்பி அங்குள்ள கழிவறையில் போதையில் தூங்கியுள்ளாா். பின்னா் 2 மணி நேரம் கழித்து தீபக் குழந்தையைத் தேடியுள்ளாா்.

இதற்கிடையில், பேருந்து நிலையத்தில் 2 வயது குழந்தை நீண்ட நேரமாக தனியாக இருப்பதைக் கண்ட பொதுமக்கள் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற ஆய்வாளா் வைரம் குழந்தையை மீட்டு பொள்ளாச்சியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தாா்.

இந்நிலையில், குழந்தை காணவில்லை என பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தீபக் புகாா் தெரிவித்தாா். பின்னா் குழந்தை மீட்கப்பட்டது குறித்த தகவலை அவரிடம் தெரிவித்து காப்பகத்தில் இருந்து குழந்தையை தீபக்கிடம் போலீஸாா் ஒப்படைத்தனா். பின்னா் தீபக்கு போலீஸாா் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com