கருமத்தம்பட்டி அருகே வீட்டின் கதவை உடைத்த மா்ம நபா் 5 பவுன் நகையை திருடிச் சென்றாா்.
சூலூா் அருகே கருமத்தம்பட்டி, தீரன் சின்னமலை நகரைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி. ரியல் எஸ்டேட் அதிபா். இவா் வியாழக்கிழமை இரவு வெளியூா் சென்ற நிலையில் அவரது மனைவி சுசீலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா்.
இந்நிலையில், வீட்டின் பின்பக்க கதவு அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சத்தம் கேட்டு படுக்கை அறையில் இருந்து சுசீலா வெளியே வந்துள்ளாா். அப்போது, கதவை உடைத்துக் கொண்டு மா்ம நபா் ஒருவா் உள்ளே வருவதைக் கண்ட அவா் படுக்கை அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டாா். பின்னா் அருகில் உள்ளவா்களுக்கு செல்லிடப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா். அதற்குள் உள்ளே வந்த கொள்ளையன் மற்றொரு படுக்கை அறையில் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு சுசீலா இருந்த அறையை உடைக்க முயன்றுள்ளாா்.
அதற்குள் அக்கம் பக்கத்தினா் வந்ததால் அந்த நபா் அங்கிருந்து தப்பியோடி உள்ளாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விசாரணை நடத்தினா். இது குறித்து புகாா் அளித்தும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்யவில்லை என கோவிந்தசாமி தெரிவித்தாா்.