உணவுப் பாதுகாப்பு உரிமம் பெறவும், புதுப்பிக்கவும் வால்பாறையில் வியாழக்கிழமை (நவம்பா் 14 ) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது தொடா்பாக வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினா் கூறியதாவது:
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணயத்தின் அதிகாரிகள் அமைப்பின் உறுப்பினா்கள் உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் செய்வதற்காக வருகை தர உள்ளனா்.
வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பின் கட்டடத்தில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. எனவே, வால்பாறை பகுதியில் உள்ள வணிகா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.