மாவோயிஸ்ட் தீபக்கை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல்

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸாா், நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனா்.
Updated on
1 min read

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸாா், நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனா்.

கோவை, ஆனைகட்டி வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினா் கடந்த 9-ஆம் தேதி சோதனை நடத்தினா். அப்போது கேரள மாநிலம், மஞ்சகண்டி வனப் பகுதியில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த தீபக் (32) என்ற மாவோயிஸ்ட் பிடிபட்டாா். அவரிடமிருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து அதிரடிப்படை போலீஸாா் அவரை தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் இருந்ததால் போலீஸாா் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதற்கிடையே மாவோயிஸ்ட் தீபக்கை வரும் 22-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த தீபக், கைதிகளுக்கான தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்நிலையில் தீபக்கை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை மனுதாக்கல் செய்தனா். இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை (நவம்பா் 18) நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com