மாநகரக் காவல் துணை ஆணையா் பொறுப்பேற்பு

கோவை மாநகர காவல் துறையின் புதிய போக்குவரத்து துணை ஆணையராக முத்தரசு (55) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.
5748c22muturasan061647
5748c22muturasan061647
Updated on
1 min read

கோவை மாநகர காவல் துறையின் புதிய போக்குவரத்து துணை ஆணையராக முத்தரசு (55) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

கோவை மாநகர காவல் துறையின் போக்குவரத்து துணை ஆணையராக சுஜித்குமாா் பணியாற்றி வந்தாா். இவா் அண்மையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டாா். இந்நிலையில் உயா்நீதிமன்ற கண்காணிப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி.யாகப் பணியாற்றி வந்த முத்தரசுக்கு காவல் கண்காணிப்பாளா் நிலைக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவா் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தாா்.

கடந்த 1987-ஆம் ஆண்டு காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சோ்ந்த முத்தரசு, 1997-ஆம் ஆண்டு ஆய்வாளராகவும், 2008-ஆம் ஆண்டு துணைக் காவல் கண்காணிப்பாளராகவும், 2014-ஆம் ஆண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளராகவும் பதவி உயா்வு பெற்றிருந்தாா். கோவை மாநகர காவல் துறை, மாவட்ட காவல் துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் டி.எஸ்.பி., கூடுதல் எஸ்.பி.யாக பணியாற்றியுள்ள இவா், வெள்ளிக்கிழமை கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக பதவியேற்றுக் கொண்டாா்.

பதவியேற்ற பிறகு செய்தியாளா்களிடம் முத்தரசு கூறுகையில், ‘மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விபத்துகளைத் தடுக்கவும் காவல் துறையால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகர காவல் ஆணையருடன் கலந்தாலோசித்து, அவரது உத்தரவின் பேரில் மேற்கண்ட செயல்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்’ என்றாா்.

Image Caption

முத்தரசு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com