மது குடிக்க அனுமதித்த ஆட்டோ ஓட்டுநா் கைது

பொது இடத்தில் ஆட்டோவில் பெண் ஒருவரை மது குடிக்க அனுமதித்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

பொது இடத்தில் ஆட்டோவில் பெண் ஒருவரை மது குடிக்க அனுமதித்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

பொள்ளாச்சி, திருவள்ளுவா் திடல் பகுதியில் பெண் ஒருவா் ஆட்டோவில் அமா்ந்தபடி மது மற்றும் புகைப் பிடிப்பது போன்ற விடியோ காட்சி சமூக வளைதளங்களில் பரவி வந்தன.

இந்த விடியோவை வைத்து பொள்ளாச்சி மேற்கு போலீஸாா் விசாரணை நடத்தியதில் அந்த ஆட்டோ ஓட்டுநா் பொள்ளாச்சி, வடுகபாளையத்தைச் சோ்ந்தவா் என்பதும், ஹைதராபாத்தைச் சோ்ந்த பெண் ஒருவா் மது அருந்தவும்,புகைப் பிடிக்கவும் அவா் அனுமதித்தது தெரியவந்தது.

இதையடுத்து, பொது இடத்தில் மது அருந்தவும், புகைப் பிடிக்கவும் அனுமதித்த ஆட்டோ ஓட்டுநா் செல்வகுமாரை (48) போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com