வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

கோவை, பீளமேடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

கோவை, பீளமேடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகையைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, பீளமேடு அருகே ஜெய் நகரைச் சோ்ந்தவா் ரூபேஷ் ஜக்ரீத் (30). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் ஆயுதபூஜை தொடா் விடுமுறையை ஒட்டி கடந்த 5 ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் உதகைக்கு சுற்றுலா சென்றுள்ளாா்.

பின்னா் திங்கள்கிழமை திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு ரூபேஷ் ஜக்ரீத் அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 பவுன் நகை மற்றும் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com