வீட்டின் ஜன்னலை உடைத்து பணம் திருட்டு

சூலூா் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ. 24 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Updated on
1 min read

சூலூா் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து ரூ. 24 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஊத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமண்ண கவுண்டா் மகன் ராமசாமி. இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றாா். ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பாா்த்தபோது வீட்டின் ஜன்னல் மற்றும் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ. 24, 000 ரொக்கம் மா்ம நபா்களால் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com