தோட்டத் தொழிலாளர் ஆலோசனைக் குழு உறுப்பினராக வால்பாறை அமீது நியமனம்
By DIN | Published On : 02nd September 2019 04:55 AM | Last Updated : 02nd September 2019 04:55 AM | அ+அ அ- |

தோட்டத் தொழிலாளர் ஆலோசனைக்குழு உறுப்பினராக வால்பாறை அமீது நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர் வாரியம் மூலம் தோட்டத் தொழிலாளர் பிரிவில் புதிய பொறுப்புகளுக்கு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தோட்டத் தொழிலாளர் ஆலோசனைக் குழு உறுப்பினராக வால்பாறை கூட்டுறவு நகர வங்கித் தலைவரும், அதிமுக தொழிற்சங்கத் தலைவருமான வால்பாறை அமீது நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு, தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.