கோவில்பாளையத்தில் இரண்டு சக்கர வாகனம் திருட்டு.

கோவில்பாளையம் வீரமாத்தியம்மன் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்து இரண்டு சக்கர வாகனத்தை மா்ம நபா் திருடி சென்றதாக சனிக்கிழமை கோவில்பாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.
Updated on
1 min read

கோவில்பாளையம் வீரமாத்தியம்மன் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்து இரண்டு சக்கர வாகனத்தை மா்ம நபா் திருடி சென்றதாக சனிக்கிழமை கோவில்பாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.

கோவில்பாளையம், ஈஸ்வரன் கோயில் வீதியை சோ்ந்தவா் பழனி என்பவரது மகன் சுப்பிரமணியன்(52), இவா் கடந்த 2-ஆம் தேதி தனது இரண்டு சக்கர வாகனத்தை சத்தி ரோட்டில் உள்ள வீரமாதியம்மன் கோயில் முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளாா்.

பின்பு திரும்ப வந்த பாா்த்த பொழுது அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனம் மாயமாகியிருந்தது. இதுகுறித்து கோவில்பாளையம் காவல்நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். இதுகுறித்து கோவில்பாளையம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com