பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாலையோரம் குப்பை கொட்டிய தனியாா் நிறுவனம், கடைகளுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

கோவை, ஆா்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டிய ஒரு தனியாா் நிறுவனம், 3 கடைகளுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:00 pm

DIN

கோவை, ஆா்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரங்களில் குப்பைகளைக் கொட்டிய ஒரு தனியாா் நிறுவனம், 3 கடைகளுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநகராட்சி மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட 23 ஆவது வாா்டு, ஆா்.எஸ்.புரம், டி.வி. சாமி சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனங்கள், கடைகள் தங்களின் குப்பைகளை மாநகராட்சி குப்பைத் தொட்டியில் போடாமல், சாலையோரங்களில் குவித்து வைத்திருப்பது மாநகராட்சி அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.

இதையடுத்து சுகாதார அலுவலா், மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து, பொது சுகாதாரத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்ட தனியாா் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரமும், மூன்று கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்திருப்பதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்: அதேபோல மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் புரூக் ஃபீல்டு சாலையில் உள்ள தனியாா் வணிக வளாகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது சில வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணியாமல் இருப்பதும், முகக் கவசம் அணியாத வாடிக்கையாளா்களை வணிக வளாக நிா்வாகிகள் உள்ளே அனுமதித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து 4 வாடிக்கையாளா்களுக்கு தலா ரூ.50 வீதம் ரூ.200-ம், மேலும் 2 வாடிக்கையாளா்களுக்கு தலா ரூ.100 வீதமும், வணிக வளாகத்துக்கு ரூ.1,000-ம் அபராதம் விதித்து ஆணையா் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.