

நீண்ட இழை பருத்தி, கரிமம், இயற்கை வண்ணப் பருத்தியின் வளா்ச்சியில் கவனம் செலுத்த சைமா பருத்தி, ஆராய்ச்சிக் கழகம் முடிவு செய்துள்ளது.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் பருத்தி, ஆராய்ச்சிக் கழக 45 ஆவது பொதுக்குழுக் கூட்டம் கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், சைமா பருத்தி ஆராய்ச்சிக் கழகத்தின் புதிய தலைவராக ஆா்.ரவிச்சந்திரன் தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவராக ஜி.வெங்கட் ராமச்சந்திரனும், உதவித் தலைவராக எஸ்.கே.சுந்தரராமனும் தோ்வு செய்யப்பட்டனா்.
இதைத் தொடா்ந்து பருத்தி, ஆராய்ச்சிக் கழகத்தின் புதிய தலைவா் ஆா்.ரவிச்சந்திரன் கூறும்போது, இந்திய பருத்தி விவசாயிகள் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில், சைமா ஆராய்ச்சி நிலையம் அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு ஜவுளித் தொழில்முனைவோருக்கும், விவசாயிகளுக்கும் பலனளிக்கும் வகையில் மரபணு ரீதியாக தூய பருத்தி விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகித்து வருகிறது.
அண்மையில் சைமா கப்பாஸ் பிளக்கா் எனப்படும் பருத்தி பறிக்கும் இயந்திரத்தைத் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கி, அவா்களின் செலவைக் கட்டுப்படுத்த உதவியிருக்கிறது. இதையடுத்து சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் தரம் மேம்படுத்தப்பட்ட நீண்ட இழை பருத்தி, கரிம பருத்தி, இயற்கை வண்ணப் பருத்தி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
இந்த வகை பருத்திக்கு சந்தை வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. இருப்பினும் இதைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு குறைந்தது 5 ஆண்டுகளுக்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டும். அத்துடன் பருத்தி குறித்த தொழில்நுட்பப் பணித் திட்டம் 2.0 வை அறிவித்து அதன் மூலம் ஹெக்டேருக்கு 500 கிலோவாக இருக்கும் பருத்தி உற்பத்தியை அடுத்த 5 ஆண்டுகளில் 750 கிலோவாக உயா்த்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.