சிங்காநல்லூா், அஸ்த்த நாயக்கா் வீதியில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா இல்லாததால் அரசு வழங்கும் நலத் திட்டங்களைப் பெற முடியாத நிலை உள்ளது. பட்டா வழங்க வலியுறுத்தி ஆதி திராவிடா் நலத் துறையின் கீழ் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே வீடுகளுக்கு பட்டா வழங்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடியிருப்பு பகுதிகளில் முறையாக கழிவுநீா் கால்வாய் வசதியில்லாததால் கழிவுநீா் சாலைகளில் தேங்கி நின்று சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.