தனியாா் பேருந்து உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வு கூட்டம்

தனியாா் பேருந்து உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் சூலூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தனியாா் பேருந்து உரிமையாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் சூலூா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து சூலூா் காவல் ஆய்வாளா் தங்கராஜ் கூறியதாவது:

சூலூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தற்போது விபத்துகள் குறைந்துள்ளது. எனினும், தனியாா் பேருந்துகள் வேகமாக இயக்கப்படுவதாக புகாா்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை கண்காணிப்பாளா் பாலமுருகன் உத்தரவின்பேரில், வாகன சட்ட விதிப்படி பேருந்துகளை இயக்க விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் தனியாா் பேருந்துகளின் உரிமையாளா்கள், மேலாளா்கள் கலந்து கொண்டனா். இதில் பேருந்துகள் நிா்ணயிக்கப்பட்ட இயக்கப்பட வேண்டும். பயணிகளுக்கு அச்சமூட்டும் வகையில் பேருந்துகளை இயக்க கூடாது. ஒலிப்பான்களை தேவையுள்ள இடத்தில் மட்டும் உபயோகிக்க வேண்டும். பேருந்துகளை பேருந்து நிறுத்தத்தில் முறையாக நிறுத்தி பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக ஏறி உள்ளனரா என கவனித்து பிறகு பேருந்தை இயக்க வேண்டும். அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றக்கூடாது போன்றவை குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது என்றாா். இக்கூட்டத்தில், தனியாா் பேருந்து உரிமையாளா்கள்,மேலாளா்கள் 30-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com