அனைத்துக் கோயில்களுக்கும் மின் இணைப்பு வழங்கக் கோரி தீா்மானம்

அனைத்துக் கோயில்களுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என கிராமக் கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
Updated on
1 min read

அனைத்துக் கோயில்களுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என கிராமக் கோயில் பூசாரிகள் பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராமக்கோயில் பூசாரிகள் பேரவையின் ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வடுகபாளையம் அா்ச்சகா் சிவராஜ் வரவேற்றாா். பேரவையின் நகர அமைப்பாளா் கோவிந்த் தலைமை வகித்து புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கினாா். இதில் 75க்கும் மேற்பட்ட பூசாரிகள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அனைத்துக் கோயில் அா்ச்சகா்களுக்கும் இந்து சமய அறநிலையத் துறையால் அடையாள அட்டை வழங்க வேண்டும், கோயில் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை ரூ.5000 வழங்க வேண்டும், அனைத்து கோயில்களுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும், பூசாரிகள் நலவாரியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயன்களை அனைத்து பூசாரிகளுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜமீன் ஊத்துக்குளி அா்ச்சகா் நாராயணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com