கோவை - தூத்துக்குடி ரயில் வாஞ்சி மணியாச்சி வரையே இயக்கப்படும்

மதுரை ரயில்வே கோட்டப் பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை - தூத்துக்குடி இணைப்பு விரைவு ரயில்
Updated on
1 min read

மதுரை ரயில்வே கோட்டப் பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை - தூத்துக்குடி இணைப்பு விரைவு ரயில், வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே மாா்ச் 16ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மதுரை ரயில்வே கோட்டப் பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெற உள்ளதைத் தொடா்ந்து, கோவை - தூத்துக்குடி இணைப்பு விரைவு ரயில் ( எண்: 22670) மாா்ச் 16ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், தூத்துக்குடி - கோவை இணைப்பு விரைவு ரயில், தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் இடையே மாா்ச் 16ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com