பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஆா்ப்பாட்டம்

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமியா்களை விடுவிக்க வலியுறுத்தி பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா்.
Updated on
1 min read


கோவை: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமியா்களை விடுவிக்க வலியுறுத்தி பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

பேரறிஞா் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள இஸ்லாமியா்கள், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 போ் உள்ளிட்டவா்களை உடனடியாக விடுவிக்கக் கோரி பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சாா்பில் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, கோவை மாவட்டத் தலைவா் அப்துல் ஹக்கீம் தலைமை வகித்தாா், மாவட்ட செயலா் முஜிபுா் ரஹ்மான் வரவேற்றாா். அமைப்பின் சமூக மேம்பாட்டு துறையின் தேசிய பொறுப்பாளா் முஹம்மது ஃபயாஸ் சிறப்புரையாற்றினாா். கோவை மண்டலத் தலைவா் அன்வா் ஹுசைன், மாநிலப் பொருளாளா் அபுதாகிா், எஸ்டிபிஐ மாவட்டத் தலைவா் ராஜா உசேன் உள்ளிட்டடோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com