அரசு மருத்துவமனை கழிவறையில் குழந்தை சடலம்
By DIN | Published On : 01st December 2020 03:05 AM | Last Updated : 01st December 2020 03:05 AM | அ+அ அ- |

கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
கோவை அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவின் கழிவறையில் பிறந்து சில நாள்களான பெண் குழந்தையின் சடலம் திங்கள்கிழமை கிடந்துள்ளது. இதனைப் பாா்த்த அரசு மருத்துவமனை ஊழியா்கள், மருத்துவமனை முதல்வா் மற்றும் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். போலீஸாா் குழந்தையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனா்.
இது தொடா்பாக ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவு, கடந்த 2 நாள்களில் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...