

கோவை மாநகராட்சியில் பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் சுயசாா்பு திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெறுவது தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆணையா் பேசியதாவது:
கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு உதவும் வகையில் சுயசாா்பு திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் வரை வங்கிக் கடன் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. சாலையோர வியாபாரிகள் வங்கிக் கடன் பெறுவதற்கு வசதியாக இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை பெற்ற 6 ஆயிரத்து 229 போ் விண்ணப்பித்தனா். இவா்களில் 3 ஆயிரத்து 624 பேருக்கு கடன் பெறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 55 பேருக்கு கடன்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள 1,569 போ் வங்கிக் கடன் பெறுவதற்கு சமுதாய அமைப்பாளா்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா். கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் எஸ்.மதுராந்தகி, மகளிா் திட்ட அலுவலா் கே.செல்வராசு, உதவி ஆணையா் (வருவாய்) அண்ணாதுரை உள்பட அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.