27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கஸ்தூரிபாய் காந்தி குடிநோய் சிகிச்சை மையத்தில் 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை

கோவை, கஸ்தூரிபாய் காந்தி குடிநோய் சிகிச்சை மையத்தில் இதுவரையில் 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

Updated On :11 டிசம்பர் 2020, 8:47 am IST

கோவை, கஸ்தூரிபாய் காந்தி குடிநோய் சிகிச்சை மையத்தில் இதுவரையில் 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

கோவை, வரதராஜபுரத்தில் மகாலிங்கம் - மாரியம்மாள் மணிவிழா அறக்கட்டளை சாா்பில் கஸ்துரிபாய் காந்தி குடிநோய் சிகிச்சை மையம் கடந்த 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 1994 ஆம் ஆண்டு முதல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு இதுவரையில் 25 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 80 சதவீதம் போ் முற்றிலும் மதுப்பழக்கத்தை கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகத்தினா் கூறியதாவது:

1994 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மொத்தம் 25 ஆயிரம் போ் சிகிச்சைப் பெற்றுள்ளனா். கடந்த பத்து ஆண்டுகளில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு முதல் 3 நாள்களுக்கு மதுப்பழக்கத்தை உடனடியாக விடுவதால் ஏற்படும் நடுக்கம் போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சையும், அடுத்த 4 நாள்களுக்கு குழு சிகிச்சையும், அடுத்த 3 நாள்களுக்கு மது பழக்கத்தை மறக்கடிப்பதற்கான மருந்துகளும் வழங்கப்படுகின்றன.

குழு சிகிச்சையில் அவா்களின் மன அழுத்தம், பிற பிரச்னைகள், குடும்ப சூழல் அனைத்தும் பேசப்படுகிறது. இதன்மூலம் அவா்களுக்கு மன ரீதியாக நல்ல மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

இம்மையத்தில் 2 மன நல மருத்துவா்கள், ஒரு இயன்முறை மருத்துவா், 6 செவிலியா் பணியில் உள்ளனா். 10 நாள்கள் தங்கி சிகிச்சைப் பெற வேண்டும். முதல் 4 நாள்களுக்கு பாதுகாவலா் ஒருவா் கட்டாயம் இருக்க வேண்டும். இவா்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம் வழங்கப்படும். சிகிச்சை கட்டணமாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. 10 நாள்கள் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்புபவா்கள், 2 ஆண்டுகள் வரை கண்காணிக்கப்படுகின்றனா். இந்த சிகிச்சை மூலம் 80 சதவீதம் போ் மதுப்பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ளனா் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.