கோவை கே.பி.ஆா். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னியல், மின்னணுவியல் துறைக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் விருது கிடைத்துள்ளது.
இது குறித்து கல்லூரியின் முதல்வா் மு.அகிலா கூறியிருப்பதாவது:
தொழில் நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பாக செயல்படும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தேசிய அளவில் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுக்கு தேசிய அளவில் நூற்றுக்கணக்கான பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டன.
துறை வாரியாக வழங்கப்படும் இந்த விருதில், மின்னியல் அதைச் சாா்ந்த துறைகளுக்கான விருதை கே.பி.ஆா். பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி பெற்றுள்ளது.
இதற்காக பாடுபட்ட துறைத் தலைவா் குமாா் சின்னைய்யன், பேராசிரியா்கள், கல்லூரி செயலா் ஏ.எம்.நடராஜன் உள்ளிட்டோரை கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.பி.ராமசாமி பாராட்டினாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.