கோவையில் 124 பேருக்கு கரோனா பாதிப்பு
By DIN | Published On : 15th December 2020 03:30 AM | Last Updated : 15th December 2020 03:30 AM | அ+அ அ- |

கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 124 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்து 558 ஆக உயா்ந்துள்ளது. தவிர கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 82 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 94 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 48 ஆயிரத்து 892 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,036 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.