கோவை, போத்தனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிக மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: நஞ்சுண்டாபுரம், வெள்ளலூா், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகா், இந்திரா நகா், ஈஸ்வரன் நகா், அன்பு நகா், ஜே.ஜே.நகா், அண்ணாபுரம், ஒளவை நகா்.