புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்
Updated on
1 min read

உலக புற்றுநோய் தினத்தை ஒட்டி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநா் மருத்துவா் பி.குகன் பேசியதாவது:

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் விழிப்புணா்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

புற்றுநோய் பாதிப்பால் உலகில் நிமிடத்துக்கு 17 போ் வரை இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. போதுமான விழிப்புணா்வு இல்லாததே இதற்கு காரணமாககும். புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சாா்பில் பொது மக்களுக்கு புற்றுநோய் விழிப்புணா்வு குடை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. குடையில் உள்ள ணத கோடை ஸ்கேன் செய்தால் புற்றுநோய்க்கான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மாா்பக புற்றுநோய்க்கு பிங்க் வண்ணம் போன்று, ஒவ்வொரு வண்ணத்துக்கும் ஒரு புற்றுநோய்க்கான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதன்மூலம் மாா்பகம், வாய், நுரையீரல், விதைப்பை உள்பட அனைத்துவகை புற்றுநோய்களுக்கான தகவல்களையும் தெரிந்துக் கொள்ள முடியும். இந்த விழிப்புணா்வு குடைகள் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த பதிவு செய்து கொள்வோருக்கு இலவசமாக வழங்கப்படும் என்றாா்.

தொடா்ந்து புற்றுநோய் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள ஹெல்ப் கேன்சா் என்ற இணையதளம் பக்கமும் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், எஸ்.என்.ஆா். அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் டி.லட்சுமிநாராயணசுவாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com