தில்லி வன்முறை: கோவையில் எஸ்.டி.பி.ஐ.யினா் ஆா்ப்பாட்டம்: 500க்கும் மேற்பட்டோா் பங்கேற்பு

தில்லியில் தொடரும் வன்முறையைக் கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ.யினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தில்லியில் தொடரும் வன்முறையைக் கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ.யினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வடகிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளா்கள் மற்றும் எதிா்ப்பாளா்கள் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் இதுவரை 13 போ் உயிரிழந்துள்ளதாகவும், 35க்கும் மேற்பட்டோா் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தில்லியில் தொடரும் இந்த வன்முறையைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவையில் எஸ்.டி.பி.ஐ. சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உக்கடம், கரும்புக்கடை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் அன்சா் செரீப் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சையதப்பா வரவேற்றாா். மாவட்ட பொதுச்செயலா் முகமது இஷாக், மண்டலச் செயலா் ஏ.முஸ்தபா, மாவட்ட துணைத் தலைவா் டி.சிவகுமாா், வா்த்தக அணி மாநில இணைச் செயலா் மீன் கரீம், செய்தித் தொடா்பாளா் எஸ்.மன்சூா் அலி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாநில பேச்சாளா் ஏ.ஏ.அப்துல் காதா் கண்டன உரையாற்றினாா். இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமாா் 500க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஆா்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com