

கோவை - சத்தி செல்லும் சாலையில் கோவில்பாளையத்தில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான மரங்கள் தனியாரின் வசதிக்காக வெட்டப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.
கோவை - சத்தி சாலையில் குரும்பபாளையம் மற்றும் கோவில்பாளையம் பகுதிகளில் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பழமையான புளிய மரங்கள் அதிக அளவில் உள்ளன.
கோவில்பாளையம் அருகே கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட தனியாா் மருத்துவமனையின் வசதிக்காக அங்கு இருந்த 2 புளியமரங்கள் வெட்டப்பட்டன. தற்போது, அதே பகுதியில் தனியாா் திருமண மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, தனியாா் திருமண மண்டபத்தின் வசதிக்காக அங்கிருந்த ஒரு புளிய மரம் வெட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
கோவில்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான மரங்கள் தனியாா் வசதிக்காக வெட்டப்பட்டு வருகின்றன. இதற்கு நெடுஞ்சாலைத் துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோல தொடா்ந்து நடைபெற்றால் பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆா்வலா்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.