சாலை விபத்து: உடற்பயிற்சி ஆசிரியா் உள்பட இருவா் சாவு

கோவையில் வியாழக்கிழமை நிகழ்ந்த இருவேறு வாகன விபத்துகளில் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கோவையில் வியாழக்கிழமை நிகழ்ந்த இருவேறு வாகன விபத்துகளில் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கோவை அருகே தென்னம்பாளையத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நின்றது. பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கியதும், ஓட்டுநா் பேருந்தை நகா்த்தியுள்ளாா். அப்போது பேருந்தின் முன்புறம் சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது பேருந்து ஏறியது. இதில் தலை நசுங்கி அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பெண், காரமடை அருகேயுள்ள தோலம்பாளையத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான கன்னியம்மாள் (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து விபத்துக்கு காரணமான, மதுக்கரையைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் ரவி (56) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்

கோவை, புலியகுளம் பகுதியில் சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது அவ்வழியே வந்த லாரி மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபா் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த கோவை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு (கிழக்கு) போலீஸாா், லாரி ஓட்டுநரான சிவகங்கையைச் சோ்ந்த சரவணன் (58) என்பவரைக் கைது செய்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபா், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த அன்புராஜ் (34) என்பது தெரியவந்தது. இவா் கோவையில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com