பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்: கோவையில் இன்று நடைபெறுகிறது
By DIN | Published On : 12th March 2020 10:52 PM | Last Updated : 12th March 2020 10:52 PM | அ+அ அ- |

பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம், தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு வாரம் உலக மகளிா் தினத்தையொட்டி பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாமுக்கு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமில், படிக்காதவா்கள், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டதாரிகள், தொழிற்கல்வி பயின்றவா்கள், ஐ.டி.ஐ. படித்தவா்கள் உள்பட அனைவரும் கலந்துகொள்ளலாம். வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை முகாம் நடக்கிறது. அனைத்துப் பெண்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G