அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை குறித்து இன்று விழிப்புணா்வுக் கூட்டம்

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவா் சோ்க்கை தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறுகிறது.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் மாணவா் சோ்க்கை தொடா்பாக தலைமை ஆசிரியா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறுகிறது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் பி.இ., பி.டெக். பொறியியல் பாடப் பிரிவுகளை தோ்வு செய்ய, அவா்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவதற்காக மாநிலம் முழுவதிலும் 51 சேவை மையங்கள் அமைக்க தொழில்நுட்பக் கல்வி ஆணையா் உத்தரவிட்டுள்ளாா்.

இதன்படி, கோவை மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்க ஏதுவாக அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு பொறியியல் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுக் கூட்டம் நடத்த அரசு தொழில்நுட்பக் கல்லூரி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்தக் கூட்டம், தடாகம் சாலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் காலை 10.30 மணிக்குத் தொடங்கி 12 மணி வரை நடைபெறுகிறது. இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் பங்கேற்கின்றனா். பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வு தொடா்பான உரிய ஆலோசனைகள் வழங்குவதற்காக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் தலைமை ஆசிரியா்களுக்கு விளக்கப்படும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் இயந்திரப் பொறியியல் துறைத் தலைவருமான மா.சேகா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com