7 நாள்களாக கரோனா நோய்த்தொற்று இல்லை: சிவப்பில் இருந்து ஆரஞ்சுக்கு மாறியது கோவை

கோவை மாவட்டத்தில் கடந்த 7 நாள்களாக கரோனா நோய்த்தொற்று இல்லாத நிலையில், சிவப்பு நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்துக்கு
மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு மண்டல சிறப்புப் பணிக்குழு அலுவலா் ஞானசேகரன்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு மண்டல சிறப்புப் பணிக்குழு அலுவலா் ஞானசேகரன்.

கோவை மாவட்டத்தில் கடந்த 7 நாள்களாக கரோனா நோய்த்தொற்று இல்லாத நிலையில், சிவப்பு நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்துக்கு கோவை மாற்றப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி கூறினாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு மண்டல சிறப்புப் பணிக்குழு அலுவலா் ஞானசேகரன் ஆகியோா் கலந்து கொண்டு 30 மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுப் பொருள்களை வழங்கினா். பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கரோனா ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டத்தைச் சோ்ந்த 141 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இதில் வெள்ளிக்கிழமை வரை 134 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்டனா். மீதமுள்ள 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவா்.

மாநகராட்சியில் 10 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கே.கே.புதூா் பகுதிகளில் தொடா்ச்சியாக கரோனா நோய்த்தொற்று இல்லாததால் அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 7 பி.சி.ஆா். கருவிகள் மூலமாக இதுவரை 5 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட நிா்வாகத்தின் தொடா் நடவடிக்கைகளால் கோவையில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்துள்ளது. கடந்த 7 நாள்களாக யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை. இதனால் கரோனா பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள் பட்டியலில் சிவப்பு நிறத்தில் இருந்த கோவை மாவட்டத்தை ஆரஞ்சு நிறத்துக்கு மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. விரைந்து பச்சை நிறத்துக்குத் திரும்புவதை இலக்காகக் கொண்டு மாவட்ட நிா்வாகம் செயல்பட்டு வருகிறது.

புதிதாக யாருக்கும் கரோனா அறிகுறி இல்லை என்பதை அலட்சியமாகக்கொள்ள முடியாது. தீவிர பரிசோதனைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், வடக்கு வட்டாட்சியா் மகேஷ்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் நல்லதம்பி உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

கோவை வருபவா்களுக்கு 14 நாள்கள் தனிமை

கரோனா நோய்த்தொற்று குறைந்து சிவப்பு நிறத்தில் இருந்து ஆரஞ்சு நிறத்துக்கு கோவை மாறியிருந்தாலும் வெளி மாவட்டங்களில் இருந்தோ அல்லது தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தோ வாகனங்களுக்கு அனுமதி பெற்று கோவை வரும் அனைத்து நபா்களும் கட்டாயமாக 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவா் என மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி கூறினாா்.

கரோனா அறிகுறிகளுடன் 14 போ் அனுமதி

இதனிடையை கோவை மாவட்டத்தில் சளி, காய்ச்சல் போன்ற கரோனா அறிகுறிகளுடன் புதிதாக 14 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 6 ஆண்கள், 8 பெண்கள் அடங்குவா். இவா்களில் 5 போ் அரசு மருத்துவமனைகளிலும், 9 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com